Sunday, March 18, 2007

நினைத்தேன் எழுதுகிறேன் - டாக்டர் அ. இரபியுதீன்



டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளைக்கான இந்த வலைப்பதிவின் பக்கங்களில், அமைப்பின் செய்திகளையும் தகவல்களையும் தாண்டி மனித வாழ்வியலின் முன்னேற்றம் சார்ந்த 'தன்னம்பிக்கை' பேசும் கட்டுரைகள், கவிதைகள் இனிஇடம் பெறலாம். மாணவ மாணவிகளின் கல்விச் சார்ந்த நுட்பமான வெளிப்பாடுகளையும் வெளியிட எண்ணம் உண்டு. தவிர, மதநல்லி ணக்கச் செய்திகளையும் இந்த பக்கங்களில் வெளியிட்டு நல்லெண்ணங் களைப் பரப்பவும் எண்ணம் உண்டு.

அந்த வகையில் இங்கே......

உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவரும், எங்கள் அறக்கட்டளையின் நலம் விரும்பியுமான டாக்டர் அ. இரபியுதீன் அவர்களின் கட்டுரை ஒன்றை பிரசுரித்து மகிழ்கிறோம். 'நம்ம ஊரு செய்தி' என்கிற மாதாந்திர இதழில் டாக்டர் அ. இரபியுதீன்அவர்கள் 'நினைத்தேன் எழுதுகிறேன்' என்கிற தலைப் பில் பல ஆண்டுகளாக பயன் தரும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்
கிறார்கள். கீழே காணும் கட்டுரை, பிப்ரவரி - 2007 இதழில் வெளிவந்தது.


இந்த கட்டுரை புத்தகங்களோடு உறவாடும் மனநிலைக் கொண்டது. புத்தகங் கள் அறிவின் உறைநிலம் அல்லது வாழ்வின் கிரியாவூக்கிகள் என்கிற பார் வையில், இந்த வலைப் பதிவில் மீண்டும் அந்தக் கட்டுரையை பதிவு செய்கி றோம். தவிர, துபாய் வாழ் தமிழர்களால் 'காக்கா' என்று அன்புடனும், மரியா தையுடனும் அழைக்கப்படும் ஜனாப். சையத்சலாவுதீன் அவர்களுக்கு
நம் இந்திய ஜனாதிபதி அவர்கள் 'சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்' விருது வழங்கியதை இந்தக் கட்டுரை மறவாமல் பேசுகிறது. அந்த வகையிலும் இந்தக் கட்டுரையை பதிவு செய்வதில் மகிழ்ச்சியுண்டு.


செயலாளர்
டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை.

***********************************************




நினைத்தேன் எழுதுகிறேன்.
-------------------------------------
- டாக்டர் அ. இரபியுதீன்

(உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர்)




சென்னையில் சென்ற மாதம் நடந்த புத்தகக் காட்சியை முதலமைச்சர் கலை ஞர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.அப்போது, ஆண்டுதோறும் ஐந்து சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு இலட்ச ரூபாய் பரிசு வழங்க தனது சொந்தப் பணத்திலிருந்து கலைஞர் ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்.!


புத்தகக் காட்சி நடத்தும் தென்னிந்திய நூல் வெளியீட்டாளர்களின் விற்பனை யாளர்கள் சங்கம் இந்தப் பரிசுகளை வழங்கும்.தானே தமிழ் இலக்கிய வளர்ச் சியில் ஈடுப்பட்டிருக்கும் முதல்வர் கலைஞர், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்துள்ள மிகப் பெரிய உதவி, இது.


தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு என்றோ, தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு என்றோ இதுவரை எந்த நிறுவனமும், எந்த தனிப்பட்டவரும் ஒரு கோடி ரூபாய் கொடுத்தது இல்லை! கலைஞர் தனது சொந்தப்பணத்திலிருந்து இவ்வ ளவு பெரிய தொகையை வழங்கியதைப் பார்த்து தமிழர்கள் அனைவரும் பூரித் திருப்பார்கள்.


தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் அனைவரும் இதற்காகக் கலைஞரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கி றார்கள். நானும் என் பங்கிற்கு கலைஞரை வாழ்த்துகிறேன்! மனதாரப் பாராட் டுகிறேன்.


சிறந்த சீர்திருத்தப் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கப்படவேண்டும் என்று கலைஞர் கூறியுள்ளார். ஆனால், பரிசு யாருக்கு வழங்கப்படும், எப்படி பரிசுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார் கள் என்பதுஇன்னும் இறுதியாக்கப்படவில்லை. கலைஞரின் வழிகாட்டுதலு டன் இதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தமிழ் எழுத்தாளர்களுக்கு மட்டுந்தானே இந்தப் பரிசு? இதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.


சமுதாய முன்னேற்றத்துக்கு, சமுதாய சீர்திருத்தத்துக்கு, தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர்களுக்கேஇந்தப் பரிசு வழங்கப்பட வேண் டும். மத்திய - மாநில அரசு விருதுகள், மற்ற நிறுவனங்களின் பரிசுகள் பெற்ற வர்களுக்கேமீண்டும் மீண்டும் பரிசு தராதபடி, வெளி உலகுக்குத் தெரியாதவர் களுக்கு வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும். எழுத்தை நம்பி வறுமை யால் வாடுகிற நல்ல எழுத்தாளர்களை நிறம் கண்டு வாழ்வளிக்க உதவுவ தாகவும் அமையவேண்டும். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்தப் பரிசு களை வழங்கவேண்டும்.


இந்தப் புத்தகக் காட்சி நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். இரண்டு நாள் சென்று பார்த்தேன். நெருக்கடி இல்லாமல்வசதியாகப் பார்க்கும்படி புத்தகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. நல்ல கூட்டமும் இருந்தது. 'சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர்' என்று இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது பெற்ற துபாய் தொழிலதிபர் சையது சலாவுதீன் அவர்களுக்கு இந்தப்புத்தகக் காட்சியில் மணிமேகலை பிரசுரம் சார்பில் பாராட்டு விழாவும், புதிய புத்தக வெளியீட்டுவிழாவும் நடந்தது. அந்த விழாவில் நானும் கலந்து கொண்டேன்.


தொழிலதிபர் தாவுத் பாட்சா, ஜலால், ஜபுருல்லா, இலங்கை எழுத்தாளர் மானா மக்கீன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.சையத் சலாவுதீன் அவர்களுக்கு லேனா தமிழ்வாணனும், எனக்கு யுனிவர்சல் ஷாஜகானும் பொன்னாடை போர்த்தினார்கள்.மணிமேகலை பிரசுரத்தின் அந்த இருபத்தி இரண்டு புதிய புத்தகங்களையும் நடிகர் சத்தியராஜ் வெளியிட, பா.இராமச்சந்திரஆதித்தனும் நானு முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டோம். நான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும்போது பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் சிறப்பித்தேன்.


சீர்காழி மாலிக், மருத்துவர் அக்பர் கௌசர், அரங்க நெடுமாறன், எஸ்.பி.முத்து ராமன், தாஜ், இலங்கை பாயிக் ஆகியோரும்விழாவில் கலந்துகொண்டு சிறப் பித்தார்கள். சீர்காழி சிவ சிதம்பரம் இறை வணக்கம் பாடினார். ரவி தமிழ்வா ணன் அனைவரையும் வரவேற்றார்.


புத்தகக் காட்சியில் இலங்கை இலக்கியப் புரவலர் முனைவர் காசிம் உமர், கார்த்திக் சிதம்பரம், சரத்குமார், ராதிகா சரத்குமார்,நடிகை ரோகினி, சேவியர் மணியன் செல்வன், பர்வீன் சுல்தானா ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சரத்குமார்-ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு லேனா தமிழ் வா ணன் எழுதிய ஒரு பக்கக் கட்டுரை நூலைகளை அன்பளிப்பாகவழங்கினேன்.

****

Monday, March 5, 2007

மனதார வாழ்த்துவோம் - 'சமுதாயக் கவிஞர்' சீர்காழி இறையன்பன்




உங்களோடு சில மொழிகள்....

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுமைக்கும் நன்கு அறிமுகமான கவிஞர் திரு. இறையன்பன் அவர்கள். தமிழ்நாடு பூராவுமான இஸ்லாமியர்கள் அவரை அன்புடன் அறிவர். 'சமூதாய கவிஞர்' என்றால் அவர்களுக்கு இவர்தான் முதன்மையானவர். தீவிர இலக்கிய வட்டம் இவரை அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்றாலும்இவது கவிதைகள், இவர் சார்ந்த சமுதாய இதழ்களின் பக்கங்களில் தொடர்ந்து 30 வருடகாலமாக அலங்கரித்துக் கொண்டுதான்இருக்கிறது. கவிஞர் இறையன்பன் சீர்காழியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல அதற்கு பெருமைச் சேர்த்தவர்களிலும் ஒருவர்.

'சீர்காழியில் அறக்கட்டளை ஏற்படுத்திய பொறியாளர் அப்துல் மாலிக்!' என்கிற தலைப்பில் டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளைப் பற்றியும், அதன் நிறுவனர் அப்துல் மாலிக் அவர்களை பற்றியும் மனம் திறந்த அவரது பாராட்டை'அன்னை கதீஜா' (ஏப்ரல் - 5,2006) என்கிற இதழில், கட்டுரையாக எழுதியிருந்தார். இந்த அறக்கட்டளையின்பால்நேசம் கொண்டோரின் பார்வைக்கு அது இப்பொழுது.

- தாஜ்..

******

சீர்காழியில் அறக்கட்டளை ஏற்படுத்திய பொறியாளர் அப்துல் மாலிக்! - 'சமுதாயக் கவிஞர்' சீர்காழி இறையன்பன்.

----------------------------------------------------------------

இளம் வயதிலிருந்து கல்வியில் ஆர்வமும், கல்வித்தொண்டில் ஈடுபடுவதை இயல்பாகவும் கொண்டு சிறந்து விளங்கி வருபவர் பொறியாளர் ஹாஜி. ஏ. அப்துல் மாலிக். இவருடைய தந்தையான டி.ஏ.அப்துல் ஹமீத் அவர்கள் தனது பிள்ளைகளின் கல்விக்காக எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கினார். இப்படி அவர் அவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டதால் இரு மகன்கள் பொறியாளராகவும், ஒரு மகன் டாக்டராகவும், இன்னொரு மகன் பட்டதாரியாகவும் சிறந்து விளங்கி வருகிறார்கள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக செயல்பட்ட சிறப்பு மிக்க தந்தையின் பெயரை போற்றும் முகமாகவும், மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையின் உந்துதலா லும் தனது தந்தையின் பெயரிலேயே 'டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை' யெனஒன்றை சென்ற மாதம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதன் நோக்கங்களாக, 1. Development of Library in House/ Village/Town, 2. Carrier Education Guidance Couseling, 3.Personality Developement for Individual, 4. Public Speaking practice institute Development, 5. Financil Education Awareness. என்றஉயர்ந்த குறிக் கோள்களைக் கொண்டு இந்த அறக்கட்டளையை ஆரம்பித்து வைத்திருப்பது மிகவும் வரவேற்புக்குரிய செயலாகும்.

இதன் முதல் கட்டமாக, தன்னம்பிக்கை மாத இதழ் வெளியிட்ட 'தன்னம்பி க்கை வழிகாட்டி' என்ற ஆண்டு டைரியை முக்கியமானவர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும், சமுதாயச் சேவை புரிவோருக்கும், உயர் அதிகாரிகளுக்கும், வணிகப் பெருமக்களுக்கும்அன்பளிப்பாக வழங்கியதேடு இல்லாமல் மாணவ / மாணவிகளின் நலனுக்காக லேனா தமிழ்வாணன் எழிதிய 'மாணவ மாணவிகளுக்கான நேர நிர்வாகம்' என்றப் புத்தகத்தை தருவித்து சீர்காழி மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் அன்பளிப்பாகவே வழங்கினார்கள். தொடர்ந்து இன்னும் பல அறிய நூல்களையும்வரவழைத்து மாணவ மாணவிகளுக்கு அதனையும் அப்படியே தந்துதவினார் அறக்கட்டளையின் ஸ்தாபகர்திரு.மாலிக் அவர்கள்.

துபாயில் பணிபுரியும் இவர், ஓய்விற்காக ஊர் வருகிறபோதெல்லாம் 'கல்வி...கல்வி... என்ற தாரக மந்திரத்தை ஓதாமல்ஒருநாளும் இருக்கமாட் டார்'. மாணவர்களை கூட்டி கல்வியின் அவசியம் குறித்து அவர்களிடம் பேசி / அழுந்த அறிவுரை பல கூறியும் கழிப்பார்.

இவ்வாண்டு முதல் S.S.L.C மற்றும் +2 வில் அதிகம் மதிப்பெண் வாங்கும் சீர்காழியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சுமார் பத்து பேர்களுக்கு குறையாமல் ஆயிரக்கணக்கில் தொகையாக பரிசுகள் வழங்க இந்த அறக்கட்டளை தொடங்கியுள்ளது நம் கவனத்தைக் கவருகிற ஒன்றாகும்.

கல்விக்காக தன்னையே அர்ப்பணித்துள்ள இந்த அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான, பொறியாளர் திரு. அப்துல் மாலிக் அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் போற்றலாம், பாராட்டவும் பாராட்டலாம். இந்த உயர்ந்த உள்ளம் படைத்தவர்தனது தந்தையின் பெயரில் தொடங்கியுள்ள இந்த அறக்கட்டளை எல்லாவகையிலும் சிறந்தோங்க இறைவனிடம் கரம்
ஏந்துவோம். மேலும் மனதார வாழ்த்துவோம்.

********
வடிவமும் தட்டச்சும்: தாஜ்

satajdeen@gmail

Sunday, March 4, 2007

வாருங்கள்! வெல்வோம்!! - நிகழ்ச்சி



சீர்காழி டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை சார்பில் வெற்றிக்கரமாக நடத்திக்காட்டிய மாணவர்களுக்கான 'வாருங்கள்! வெல்வோம்!!' என்ற நிகழ்ச்சி 25.01.07 அன்று சீர்காழி எல்.எம்.சி. மேல்நிலப்பள்ளியில் நடைப் பெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மோகந்தாஸ் அறிவானந்தம் தலைமை வகித்தார். அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் தலைவர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். ஜேசீஸ் மண்டல தலைவர் இராமன் வரவேற் றார். கொள்ளிடம் ஒன்றிய நுகர்வோர் பாதுகாப்புக் குழு தலைவர் வே. இரவிச் சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டதலைவர் காமராஜ், ஆசி ரியர் இராமதாஸ் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக 'பாரதி' இயக்கதலைவர் இமயவர்மன் கலந்து கொண்டார்.


எல்லோரயும் வரவேற்று போசிய இராமன் அவர்கள் தன்னுடைய கலகலப் பான கணீர் பேச்சால் வந்திருந்த கூட்டத்தினரைதலை நிமிரவைத்தார். மோகந்தாஸ் அறிவானந்தம் அவர்கள், மாணவ மாணவிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் இந்த நிகழ்ச்சியால் தானும் தனது மேல்நிலைப் பள்ளியும், மகிழ்ச்சி கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் தலைவர் திரு. மாலிக் அவர் களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்தார்.


சிறப்பு அழைப்பாளாராக வந்திரு ந்த திரு. இமயவர்மன் அவர்கள் தனது உயிர்த்துடிப்பான பேச்சாற்றலால், அறக்கட்டளையின் தலைவர் மாலிக் அவர்களின் தொண்டுள்ளத்தையும், பரந்த நோக்கத்தையும் பாராட்டினார். தவிர, துபாயில் திரு. மாலிக் அவர்கள் சுமார் முப்பது வருடகாலமாக அற்றிவரும் பணியின் சிறப்பையும், அதனால் நம்மூர் வாசிகள் கொள்ளத்தக்க பெருமை யையும் குறிப்பிட்டுப் பேசினார்.

திரு.காமராஜ், திரு.இராமதாஸ், திரு. ரவிச்சந்திரன் ஆகியோர்கள் இந்த அறக் கட்டளையின் வளர்ச்சிக் குறித்தும், அதன் கல்விக்குறித்த பணிகள் குறித்தும் வியந்தார்கள். இப்படி ஊக்கிவிக்கும், தொண்டுள்ளம் கொண்ட இந்த அறக்கட் டளையை ஊரில்எல்லோரும் பாரட்டவேண்டும் எனவும், மாணவர்கள் இம் மாதிரியான அறக்கட்டளையின் பயன்களை அடைந்து, கல்வியில்உயர்ந்துக் காட்டவேண்டும் எனவும் கூறினார்கள்.


அடுத்துப் பேசிய டி.ஏ. அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் ஸ்தாபக ரும், அதன் தலைவருமான திரு.மாலிக் அவர்கள்தனது யதார்த்தமான உரை யை நிகழ்த்தினார். சீர்காழி பகுதியில் கல்விப்பயிலும் மணவர்கள் அனைவ ரும் கல்வியில் சிறந்து,உயர்ந்த நிலைக்கு உயர உந்துதல் சக்திப் பெறவேண் டும் எனவும், தன்னம்பிக்கைச் சார்ந்து கடின முயற்ச்சி செய்தால் நிச்சயம்
வெற்றி கிடைக்கும் என்றார். வெற்றி என்பது பொருளாதார முன்னேற்றம் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றார். இதற்குபெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு உறுதுனையாக இருக்கவேண்டும் என்றவர், தங்களது செல் லப் பிள்ளைகள் செல்வப் பிள்ளைகளாகவும் சிறக்க அவர்கள் சபதமெடுக்க வேண்டும் என்றார். மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது, தனது இந்த அறக் கட்டளைச் சார்பாக இப்பகுதி மாணவர்கள் பயனுறும் வகையில் ஐ.ஏ.எஸ். அக்கடமி ஒன்றை விரைவில் ஏற்படுத்த இருப்பதாக உறுதி அளித்தார். மாண வர்களின் கைத்தட்டல் காதைப் பிளந்தது.


விழாவில்சிறப்பு பேச்சாளராக பங்கெடுத்த் லேனா தமிழ்வாணன் அவர்கள் 'காலமும் - வெற்றியும்' எனும் தலைப்பில் மாணவர்கள் பயன்பெறும் வகை யில் தனது நட்சத்திர உரையினை நிகழ்த்தினார்:


கராத்தே கற்றுக்கொள்கிறவர்களுக்கு தெரியும் மனித உடம்பில் 27 இடங்கள் பலவீனமானவை என்று. அந்த இடத்தில் லேசாக தட்டினால் கீழே விழுந்து விடுவான்.. யார் யாரை எந்த இடத்தில் இடத்தில் தட்டிக்கொடுத்தால் எப்படி வருவார்கள் என்று சொல்ல முடியாது. யாருக்கு எந்த நேரத்தில் திருப்பம் வரும் என சொல்ல முடியாது. காந்திஜி அரிச்சந்திரா நாடகத்தை பார்த்தார். அவருடைய வாழ்க்கை பாதையே மாறிவிட்டது.


தென்னாப்பிரிக்காவில், 'பீட்டர் மாரீஸ் பர்க்' என்ற ஊர் உள்ளது. அந்த ஊர் தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம் என்று சொன்னால் எத்தனை போர் நம்புவார்கள்? காந்திஜி 'பீட்டர் மாரீஸ் பர்க்' என்ற ஊரில் ரெயிலில் முதல் வகுப்பில் பயணம்மேற்கொண்ட போதுதான், அந்த ரெயிலில் பயணம் செய்த 'நீ கருப்பன் எதற்காக இந்த ரெயிலில் வருகிறாய்?' எனக்கேட்டு கீழே தள்ளிவிட்டான். இனவெறியோடு அந்த வெள்ளையன் நடந்து கொண்டான். அது எப்படி ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைவீழ்த்துகிற அளவிற்கு ஒரு வேகத்தை தந்தது காந்தியடிகளுக்கு யென நாம் அறிவோம். யாருக்கு எந்த்வொரு சம்பவம், எந்தவொரு வார்த்தை, எந்தவொரு சூழல், எந்தவொரு கணம்... மனிதனுக்கு தூண்டுதலை தருகிறது என்று சொல்லவே முடியாது.


ஒரு மனிதனுக்கு இரண்டுமுறை வேகம் வரவேண்டும். தட்டிக் கொடுத்தால் இன்னும் நன்றாக வருவேன் என்ற வேகம் வரவேண்டும். இன்னொன்று, குட்டி சுட்டிக்காட்டுகிறபோது அந்த வேகம் வரவேண்டும். மாணவர்களது வாழ்வில் இந்த இரண்டில்ஒன்றை அவர்கள் கண்டிருப்பார்கள். அதன் மூலம் அவர்கள் ஊக்கம்பெற்று தங்களது படிப்பில் வேகம் காமித்திருப்பார்கள்.இந்த இரண்டு நிலையை அவர்கள் எய்தியப் பிறகும் படிப்பில் அவர்கள் வேகம் கொள்ளவில்லை என்றால் அவர்கள்தங்களை தாங்களே தெரிந்தே மடமை யில் ஆழ்த்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.


மாணவர்கள் ஆகட்டும், பெரியவர்கள் ஆகட்டும் ஒன்று குறித்து 'நேரமில்லை என்று சொல்வார்களேயானால், அவர்களுக்கு அது குறித்து மனமில்லை என்றுதான் பொருள். எதில் ஒருவனுக்கு ஆர்வமிருக்கிறதோ அதில் அவனுக்கு நேரமிருக்கும். எதில்அவனுக்கு ஆர்வமில்லையோ அதில் அவனுக்கு நேரமிருக்காது. படிப்பில் ஒருவனுக்கு ஆர்வமிருந்தால் தானே நேரம் உருவாகும். 24 மணி நேரத்தை ஒருவன் எப்படி பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை பொறுத்துதான் ஒருவனின் வருங்காலவாழ்க்கை அமையும்.


வாழ்க்கையில் திரும்பபெர முடியாதது இரண்டே இரண்டுதான். ஒன்று உயிர், மற்றொன்று நேரம். உயிருக்கு ஒப்பான நேரத்தைஉயிர் மாதிரிப் போற்றுங் கள். ஒருவரது வாழ்வின் உன்னதம் என்பது எல்லாநிலைகளிலுமான அவனது உயர்வுதான். மாணவர்களே நேரத்தை வகுத்து பயன்படுத்தி உங்களை உயர்த் திக்கொள்ளுங்கள். மேலும் உங்களை நீங்கள் நம்புங்கள், மிகச் சிறந்த மாணவ னாக வருவேன் என்று. அந்த நம்பிக்கையும்கூட உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த காலத்தில் வாழ்கிறீர்கள். 97, 98 சதவீதம் மதிப்பெண் பொற்றால்கூட விருப்பமான பாடத்தை படிக்க
முடியாமல் போகிறது. பெயருக்கு மார்க் எடுக்கலாம். ஆனால் நிஜத்தில் நீங்கள் பெயருக்கு மார்க் எடுக்காமல், பேர் சொல்லும்வகையில் மார்க் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்ச்சியின் முடிவில், அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளையின் செயளாலர் தாஜ், நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட, நிகழ்ச்சி சிறக்க உறுதுணைப் புரிந்த, எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

*******

எழுத்தாளர் லேனா தமிழ்வாணனுக்கு விழா மேடையில் 'நன்மொழி சித்தர்' என்றப் பட்டத்தை அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது.

*******

டி.ஏ.அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்ளை சார்பாக, 'ஸ்பான்சர்' செய்யப்பட்ட 'பங்குசந்தைக்கு வாருங்கள் பணத்தை அள்ளுங்கள்' என்கிற புத்தகம் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கும் மற்றும் நூற்றுக்கு அதிகமான சீர்காழி நகர முக்கியஸ்தர்களுக்கும் இந்த புத்தகத்தை அறக்கட்டளைச் சார்பாக அன்பளிப்பாய் வழங்கப்பட்டது.

*******

இந்த நிகழ்ச்சியின் புகைப்படக் காட்சிகளை 'வாருங்கள்! வெல்வோம்!! - புகைப் படக் காட்சி' என்கிறத் தலைப்பில் காணலாம்.

*****

- தாஜ்
செயளாலர்
டி.ஏ.அப்து ஹமீத் கல்வி அறக்கட்டளை.சீர்காழி.
satajdeen@gmail.com
-----------------------